×

2 இந்திய பொறியாளர்கள் மீதான இனபாகுபாடு வழக்கு ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு சிஸ்கோ பொறியாளர்கள் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகியோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சக ஊழியரை சாதியை காரணம் காட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து இருவருக்கும் எதிராக இனபாகுபாடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய வம்சவளியை சேர்ந்த இரண்டு பொறியாளர்களும் கடும் விசாரணைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் துறை இரண்டு சிஸ்கோ பொறியாளர்களுக்கும் எதிரான இனபாகுபாடு வழக்கை ரத்து செய்துள்ளது.

The post 2 இந்திய பொறியாளர்கள் மீதான இனபாகுபாடு வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : Washington ,Cisco ,Sundar Iyer ,Ramana Kombella ,United States ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...